அன்புடன்
அறிவுடை நம்பி
எழுத்தும் எழுத்தின் நிமித்தமும்...
அன்புடன்
அறிவுடை நம்பி
தி.மு.க வென்றால் மீண்டும் காங்கிரசுக்கு கட்டுப்பட்டுக் கழக(கலக) ஆட்சி தொடரும். இல்லை என்றால் இலங்கையில் நடக்கும் இன அழிப்பு மீண்டும் கண்ணை உருத்தும். உடனே தமிழ்மான உணர்வு மேலிட உலகத் தலைவர் உரை நிகழ்த்துவார் தன் கரை படிந்த குரலால்....
1.என் இனம் இத்தனை நாட்களாகச் செத்துக் கொண்டிருக்கிறது. தந்தி கொடுத்தோம், மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தினோம், (ஜெயலலிதா குடைச்சல் கொடுத்தும் இராமேசுவரத்தில் பேசிய தம்பி சீமான், அமீரை, வைகோ மற்றும் விமானத்தில்போய் ஏற்றி வந்து கண்ணப்பனைகைது செய்தோம்). இப்படி ஏகக் காலத்தில் ஆளும் கட்சி எதிரிக் கட்சி என வித்தியாசம் பாராது கழகம் தமிழனுக்கு கண்ணீர் வடித்து கருணை செய்யக் கேட்கிறது ஆனால் இந்த மத்திய ஆளும் தோழமை மன்(ண்)மோகன்சிங் அரசு மனசு இறங்கவில்லை. இனியும் தமிழன் நாதியற்றுப் போய்விடக்கூடாது (என் மன்னராட்சி என்னோடு முடிந்து என் குடும்பம் நாதியற்று விடும்) என்கிற வருத்ததில் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்திற்காக மத்திய அரசிலிருந்து விலகிவிடலாம் என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்துள்ளது.
2.அத்துடன் வரும் தேர்தலில் ஈழத்தமிழ் உறவுகளின் உரிமைக்காக !!! குரல் கொடுத்துவரும் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து பா.ம.க, விடுதலைச் சிறுத்தை கட்சி மற்றும் மதிமுக உடன் வரும் தேசியத் தேர்தலை சந்தித்து நாற்பதும் நமதாக்கி அன்பு நண்பர் அத்வானியை பிரதமராகவும் கழகக் (என்) குடும்பத்தில் அனைவரும் மந்திரியாகவும் சபதம் செய்யப்பட்டுள்ளது.
3. ஆகவே தமிழ் மக்களே !!! தமிழ்க்குடும்பங்கள் !!! நிம்மதியாக தமிழீழதில் வாழ வரும் தேர்தலில் மத்தியில் மாறுதல் செய்து தமிழனின் உணர்வினை உலகறிந்திட செய்திட வேண்டும்.
4. தமிழன் நிம்மதியாக வாழ தமிழீழமே சரியா தீர்வு என்று தீர்மானம் போட்டுளோம்.
வாருங்கள் வசவுகளைத் தாருங்கள். இது என் முதல் பதிவு
அன்புடன்
அறிவுடை நம்பி